Donation

Ads Area

6th புதிய தமிழ் இயல் - 9

 

Unit – 9 இன்னுயிர் காப்போம்

1.     உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் - புத்தர்

2.     ஆசிய ஜோதி என்ற நூலில் எந்த மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன- பிம்பிசாரர்

3.     ஆசிய ஜோதி என்ற நூலின் ஆசிரியர் - கவிமணி தேசிய விநாயகனார்

4.      “நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த நீள்நிலம் முற்றுமே ஆண்டிலாம்" - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - ஆசியஜோதி

5.     தேசிய விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்- 20

6.     கவிமணி தேசிய விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்- 36

7.     தேசிய விநாயகனார் பெற்ற பட்டம் - கவிமணி

8.     ஆசிய ஜோதி ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது

9.     ஆசியஜோதி என்னும் நூல் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது - புத்தர்

10.   நேர்மையான வாழ்வை வாழ்பவர் - எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

11.   ஒருவர் செய்யக் கூடாது - தீவினை

12.   எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - எளிது + ஆகும்

13.   பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பாலை + எல்லாம்

14.   இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்  - இன்னுயிர்.

15.   மலை - எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- மலையெலாம்

16.   ஆசியஜோதி என்ற நூல் ஆங்கிலத்தில் யாரால் எழுதப்பட்டது - எட்வின் அர்னால்டு

17.   “தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு

18.   வள்ளலார் சத்திய தருமச்சாலையை தொடங்கிய இடம் - வடலூர்

19.   "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று கூறியவர் – வள்ளலார்

20.   அன்னை தெராசாவிற்கு க்கான நோபல் பரிசு' கிடைத்தது - அமைதி

21.   அன்னை தெராசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் - கைலாஷ் சத்யார்த்தி

22.   "வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை" என்று கூறியவர் - அன்னை தெரசா

23.   கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் - குழந்தைகளைப் பாதுகாப்போம்

24.   கைலாஷ் சத்யார்த்தி முப்பது ஆண்டுகளில் எத்தனை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார் - 86,000

25.   கைலாஷ் சத்யார்த்தி உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் எத்தனை கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார் - 80,000

26.   “குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது " என்று கூறியவர்-கைலாஷ் சத்யார்த்தி

27.   எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்- மனித நேயம்

28.   தம்பொருளைக் கவர்ந்தவரிடம் காட்டியவர் வள்ளலார்- அன்பு

29.   அணி என்பதற்கு பொருள் - அழகு

30.   ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது அணி - இயல்பு நவிற்சி அணி

31.   இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர் - தன்மை நவிற்சி அணி

32.   ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது - உயர்வு நவிற்சி அணி

33.   தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" என்ற பாடலை இயற்றியவர் - கவிமணி

34.   "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி - இயல்பு நவிற்சி அணி

35.   "ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா" - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி - உயர்வு நவிற்சி அணி

36.   பொருத்துக.

1. அஞ்சினர்- பயந்தனர்

2. ஆகாது - முடியாது

3. கருணை - இரக்கம்

4. பார் - உலகம்

5. வீழும் - விழும்

37.   பொருத்துக.

1. நீள்நிலம் - பரந்த உலகம்

2. முற்றும் - முழுவதும்

3. கும்பி - வயிறு

4. மாரி - மழை

5. பூதலம் - பூமி

38.   பொருத்துக.

1. வள்ளலார்- பசிப்பிணி போக்கியவர்

2. கைலாஷ் சத்யார்த்தி - குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

3. அன்னை தெரசா- நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

39.   பொருத்துக. கலைச்சொல்:

1. மனிதநேயம்- Humanity

2. கருணை- Mercy

3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - Transplantation

4. நோபல் பரிசு- Nobel prize

5. சரக்குந்து- Lorry

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area