Donation

Ads Area

6th புதிய தமிழ் இயல் - 7

 

Unit – 7 புதுமைகள் செய்யும் தேசமிது

1.     புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் - தாராபாரதி

2.     மெய் என்ற சொல்லின் பொருள் - உண்மை

3.     தேசம் என்ற சொல்லின் பொருள் - நாடு

4.     நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்கும் நூல் எது என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்- திருக்குறள்

5.     காவிரிக்கரை வரை எதிரொலிக்கும் இன்மையான பாடல்களை இயற்றியவர் யார் என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்- காளிதாசன்

6.     யாருடைய அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்- கம்பர்

7.     தாராபாரதியின் இயற்பெயர் - இராதாகிருஷ்ணன்

8.     கவி ஞாயிறு என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர் - தாராபாரதி

9.     புதிய விடியல்கள் என்ற நூலை இயற்றியவர் - தாராபாரதி

10.   இது எங்கள் கிழக்கு என்ற நூலை இயற்றியவர் - தாராபாரதி

11.   விரல் நுனி வெளிச்சங்கள் என்ற நூலை இயற்றியவர் - தாராபாரதி

12.   கலைக்கூடமாகக் காட்சி தருவது - சிற்பக்கூடம்

13.   நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நூல் + ஆடை

14.   எதிர் ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- எதிரொலிக்க

15.   காந்தி அருங்காட்சியகம் எங்குள்ளது - மதுரை

16.   காந்தியடிகள் முதன்முறையாகச் சென்னை வந்த ஆண்டு- பிப்ரவரி 1919

17.   ரௌலட் சட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் யார் வீட்டில் நடைபெற்றது- இராஜாஜி

18.   காந்தி அவர்களை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க அழைத்தவர் - பாரதியார்

19.   பாரதியாரை "பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்று கூறியவர் - காந்தியடிகள்

20.   காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்த ஆண்டு- செப்டம்பர் 1921

21.   காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் எந்த மொழியைக் கற்க தொடங்கினார்- தமிழ்

22.   காந்தியடிகளைக் கவர்ந்த தமிழ்க்கையேட்டை எழுதியவர் - ஜி.யு.போப்

23.   காந்தியடிகளை கவர்ந்த தமிழ் நூல் - திருக்குறள்

24.   காந்தியடிகள் தலைமை வகித்த சென்னை இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1937

25.   சென்னை இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் - உ.வே.சாமிநாதர்

26.   "உ.வே.சாமிநாதரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது'' என்று கூறியவர் - காந்தியடிகள்

27.   காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது - மதுரை

28.   இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் - வேலுநாச்சியார்

29.   வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகள் - ஆங்கிலம்,பிரெஞ்சு, உருது

30.   சிவகங்கையின் மன்னர் – முத்துவடுகநாதர்

31.   முத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இடம் - காளையார் கோவில்

32.   வேலுநாச்சியார் எந்த கோட்டையில் தங்கி படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்- திண்டுக்கல்

33.   வேலுநாச்சியாரின் அமைச்சர் - தாண்டவராயன்

34.   வேலுநாச்சியாரின் தளபதி - பெரிய மருது, சின்ன மருது

35.   மைசூரிலிருந்து ஐதர் அலி அனுப்பிய குதிரைப் படை வீரர்களின் எண்ணிக்கை - 5000

36.   'நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கிறது' என்று கூறியவர் - சின்ன மருது

37.   சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் வேலுநாச்சியார் தலைமறைவாக இருந்தார் - 8

38.   வேலுநாச்சியார் படையில் பெண்கள் படைப்பிரிவிற்கு தலைமை ஏற்றவர் - குயிலி

39.   எந்த நாளில் சிவகங்கை கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு- விஜயதசமி

40.   வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்காததால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் - உடையாள்

41.   தன் உடலில் தீ வைத்து கொண்டு ஆயுதக் கிடங்கில் குதித்தவர் - குயிலி

42.   வேலுநாச்சியார் காலம் - 1730 – 1796

43.   வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு - 1780

44.   ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் – வேலுநாச்சியார்

45.   இலக்கண அடிப்படையில் சொல் எத்தனை வகைப்படும் - நான்கு

46.   ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் – பெயர்ச்சொல்

47.   வினை" என்ற சொல்லுக்கு பொருள் - செயல்

48.   செயலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல்

49.   பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் - இடைச்சொல்

50.   பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது- உரிச்சொல்

51.   வ.உசிதம்பரனார் சுதேசி நாவாய்ச் சங்கத்தை தொடங்கிய ஆண்டு - 1906

52.   வ.உ.சிதம்பரனார் சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் - பாரதியார்

53.   வ.உ.சிதம்பரனார் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்- பாரதியார்

54.   பொருத்துக

1. இலக்கிய மாநாடு - சென்னை

2. பாரதியார் - தமிழ்நாட்டின் சொத்து

3. குற்றாலம் - அருவி

4.  தமிழ்க்கையேடு - ஜி.யு.போப்

55.   பொருத்துக.

1. வேலுநாச்சியார் - வீரம்

2. மருது சகோதரர் - ஆற்றல்

3. ஐதர் அலி - உதவி

4. குயிலி - தியாகம்

56.   பொருத்துக.

1. நாட்டுப்பற்று- Patriotism

2. கலைக்கூடம் - Art Gallery

3. இலக்கியம் - Literature

4. மெய்யுணர்வு - Knowledge of Reality

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area